Posted in கதைகள் on 22 September 2009
Stats: 672 views and No Comments
எஸ் ராமகிருஷ்ணன் – உயிர்மை இதழில் வெளியானது இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை மறுபிரசுரம் செய்திருக்கிறேன். ** ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். [...]
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 256 views and No Comments
அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை. காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் [...]