கையருகே ஆகாயம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
தினமலர் – வாரமலர் :: சாரு நிவேதிதா ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, Vaaramalar, Varamalar, உயிரோசை, சாரு நிவேதிதா
என் முதல் ஆங்கிலக் கடிதம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
தினமலர் – கதை மலர் ( செப்டம்பர் 1993 ) :: சாரு நிவேதிதா பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, உயிரோசை, சாரு நிவேதிதா
வெளியிலிருந்து வந்தவன்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
அம்பலம் இணையதளம் :: சாரு நிவேதிதா இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற மூன்று தீமைகளில் ( ?) கடைசி இரண்டைப் பற்றியும் எங்களுக்குள் [...]
அவ்வா
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
ஆறாம்தினை இணையம் :: சாரு நிவேதிதா ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது. அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும். எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் [...]
பாக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 5 Comments
உயிரோசை இணையதளம் :: சாரு நிவேதிதா “ நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதையே எழுதுவதில்லை ?” நண்பர்களிடமிருந்து அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி இது. ‘ இது என்ன முட்டாள்தனமான கேள்வி ?’ என்று மனதில் தோன்றும். ஆனால் மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியே சொல்லி விடுகிறோமா என்ன ? ராஸ லீலாவில் வரும் நூறு அத்தியாயங்களையும் நூறு சிறுகதைகளாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ? சிறுகதை என்று தனியாக ஒன்றை எழுத வேண்டுமா என்ன ? மேலும் [...]
பிழை திருத்துபவரின் மனைவி
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · 2 Comments
அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை. காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் [...]
Filed under கதைகள் · Tagged with Classics, Fiction, Magazines, S Ramakrisnan, Uyirmai, Uyirmmai, Zines, உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன்
உள்வரம்பு: இந்திரஜித்
- இந்திரஜித் | September 15, 2009 · Leave a Comment
உயிர்மை குமாருக்கு இது பிடித்திருக்கிறது. வீடு என்றால் முதலில் லிப்ட் இருக்க வேண்டும். லிப்ட்டில் போகும் போது யாரும் கூட வராமல் தனியாகப் போக வேண்டும். கூட ஒரு ஆள் வந்தால் அவர் மூச்சு விடுவார். தனிமை உடையும். தலைகுனிந்து நிற்க வேண்டும். நிமிர்ந்து பார்த்தால் அந்த முகத்தில் ஆயிரம் உலகம் விரியும். எப்போதாவது அபூர்வமாக ஒருவர் புன்னகை செய்வார். அவருக்கு மனநோயோ என்று நமக்குப் பயம் வரும். பிறகு அந்தச் சிரிப்பை வைத்து நாம் ஆராய்ந்து [...]
Filed under கதைகள் · Tagged with Indrajith, Inthirajit, Uyirmmai, இந்திரஜித், உயிர்மை
சுவர்ப்பேய்: யுவன் சந்திரசேகர்
- யுவன் சந்திரசேகர் | September 15, 2009 · Leave a Comment
உயிர்மை வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும். வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் [...]
Filed under கதைகள் · Tagged with Uyirmai, Uyirmmai, Yuvan, Yuvan Chandrasekar, உயிர்மை, யுவன் சந்திரசேகர்
கதீட்ரல்: ரேமண்ட் கார்வெர்
- ஜி குப்புசாமி | September 15, 2009 · Leave a Comment
தமிழில்: ஜி குப்புசாமி என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்து போன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியதற்குப்பிறகு அவனை [...]
Filed under கதைகள், மொழிபெயர்ப்பு · Tagged with G Kuppusami, Kuppusamy, raymond carver, Translations, Uyirmai, Uyirmmai, ஜி குப்புசாமி, ரேமண்ட் கார்வெர்
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன
- எஸ். ராமகிருஷ்ணன் | September 15, 2009 · Leave a Comment
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த மூன்றாண்டிற்குள் நகரில் எங்கெங்கும் எந்த வகைப் பறவைகள் வந்து அடைகின்றன. அதன் குரல் எப்படியிருக்கும். எந்தத் திசையில் அவை பறந்து போகின்றன என்பதைக் கவனமாக அறிந்திருக்கிறேன். என்னை இயங்க வைத்துக்கொண்டிருப்பது இந்தப் பறவைகள்தான். பறவை என்பது எனக்கு வெறும்காட்சிப் [...]
Filed under கதைகள் · Tagged with EssRaa, S Ramakrishnan, Uyirmai, Uyirmmai, எஸ்.ராமகிருஷ்ணன்